சனி, 12 ஜூலை, 2014

ஒளிவதற்கு இடமில்லை

ஒளிவதற்கு இடமில்லை” இரண்டாம் பாகம் நாவல் என் வீட்டுமாடத்தில் பார்த்தேன்!!!.என் அம்மா தான் நூலகத்திற்கு சென்று வாங்கிவந்திருந்தார்.கூடவே என் தங்கை தேர்ந்தெடுத்த மேலும் இரு புத்தகங்கள் இருந்தன,ஆனால் என்னை கவர்ந்தது இந்த தலைப்பே...முதலில் இதை கட்டுரை என்று நினைத்து பிரித்தேன்!அது ரா.கி.ரங்கராஜன் எழுதிய நாவல்.இதுவரை கேள்விபடாத பெயராய் இருக்க,என் தோழி பவ்யாவை தொடர்புகொண்டு விசாரித்தேன். “அவருடைய கதைகள் நன்றாக இருக்கும்...படி”என ஆசிரியருக்கு பாராட்டு பத்திரம் கொடுக்க..தையல் வேலை முடித்துவிட்டு படிக்கத்துவங்கினேன்.



கதை இதுதான்:
வைரக்கற்கள் பதிக்கப்பட்டு ஒரு தமிழராலும்,ஒரு சீனராலும் சேர்ந்து செய்யப்பட்ட முருகப்பெருமான் சிலையை,அதை பாதுகாக்கும் குழந்தைப்பாண்டியனிடம் இருந்து பறிக்க எண்ணுகிறது ஒரு சீனா புரட்சி கும்பல்.அந்த வேலையை முடிக்க இருவரை பயன்படுத்துகிறது.ஒருவன் நல்லவன் ‘ரமணன்’,துப்பறியும் நிபுணர். தாவூத் என்னும் விசுவாசி சிறுவனுக்காக வைரமுருகனை களவாட துணிகிறான்.இன்னொருவன் மகா அயோக்கியன் ‘நஞ்சுண்டன்’,பணத்திற்காக திருடச்செல்கிறான்.இவர்களால் குழந்தைப்பாண்டியனின் குடும்பத்தில் என்ன கொடுமைகள் நேர்ந்தது,வைரமுருகன் களவாடப்பட்டதா இல்லையா ,தாவூதின் உயிர் காப்பாற்றபட்டதா,.....என்பதை விறுவிறுப்பான கதைக்களத்துடன் தந்துருக்கிறார் ஆசிரியர்.
பாராட்டவேண்டிய அம்சங்கள்:
ü      முதலில் பாராட்ட வேண்டியது தலைப்பு, “ஒளிவதற்கு இடமில்லை”.கதைக்களத்திற்கு பொருத்தமானதாய் அமைந்ததுதான்.பிரபல எழுத்தாளர் மறைந்த சுஜாதா அவர்களால் ாராட்டை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ü      இது ஒரு க்ரைம் நாவல் என்பதாலோ என்னவோ,கதை ஜெட் வேகத்தில் செல்கிறது ஆகையால் அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்பு பிடித்துக்கொள்கிறது.
ü      முக்கியமான சாராம்சம் இக்கதையில் என்னவென்றால் என்னைப்போல் முதல்பாகம் படிக்காதவர்களுக்கு அதன் தொடர்ச்சியான இந்த இரண்டாம் பாகம் புரியாமல் இல்லை.படிப்பவருக்கு முதல் பாகத்தின் நிகழ்ச்சியை இதில் கோர்த்து கொடுத்திருந்தார்.
ü      துணை கதாப்பாத்திரங்களை சரியாக பயன்படுத்திருந்தார்.முக்கியமாக தாவூதின் கதாபாத்திரம்,இறுதி பகுதியில் கலங்கவைக்கிறது.

இத்தகைய பாராட்டுக்குரியவர் ரா.கி.ரங்கராஜன்(மறைவு:ஆகஸ்ட் 2012)

Ø  அற்புதமான கதையுடன் இந்நாவல் இருந்தாலும் சில லாஜிக்கில்லாத விஷயங்கள் திணிக்கப்பட்டுள்ளது .ஆனால் அது தெலுங்கு ஹிரோயிப்படம் போல் இல்லை,மிகவும் சிறிய விஷயங்ளே உள்ளது.
        


ரா.கி.ரங்கராஜன் மிக சிலருக்கே தெரிந்த ஒரு எழுத்தாளர்.இவ்ர் கட்டுரைகள்,சிறுகதைகள்,கவிதைகள் என பலவாய் இருந்தவர்.இக்கதையை  டி.துரைசாமி என்னும் புனைப்பெயரைக்கொண்டு ஒரு வார இதழில் 20 பகுதிகளாய் எழுதிருக்கிறார். ‘குமுதம்’ வார இதழின் துணை ஆசிரியராய் பணியாற்றிய இவர் எழுதிய நாவல் “சுமைத்தாங்கி”,என்ற பெயரில் திரைப்படமாய் வந்துள்ளது. “அடிமையின் காதலி”,என்னும் நாவலே அவருடைய கடைசி விருப்பம் ,ஆனால் அதற்க்குள் அவரை மரணம் தழுவியது.


என் வாழ்க்கையில் புத்தகம்

என் வாழ்க்கையில் தமிழின் ஆரம்பத்திலிருந்து, புத்தகம் ஆரம்பமானது.தாய் மொழி தமிழாததால் தமிழின் மேல் அலாதி விருப்பம்.ஆனாலும் எழுத்துபிழை இருக்கும் இலக்கணப்பிழையும் இருக்கும்....ஹி...ஹி..
பள்ளிப்பருவத்தில் புத்தகம் என்றால்,பெரியம்மா வீட்டில் இருந்த ‘சிறுவர் மலர்’ மற்றும் ‘தங்கமலர்’ தான்.பின் ராஜேஷ்குமார்,இந்திரா சௌந்தர்ராஜன் மற்றும் சில குடும்ப நாவல்கள் படித்தேன்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது மத்திய நூலகத்தை அறிமுகம் செய்துவைத்தார் இயற்பியல் ஆசிரியர்.அப்பொழுது தான் நூலகத்தையே பார்த்தேன் முதல்முறையாய்.அவர் பெயர்  கூட ஞாபகம் இல்லை.ஆனால் நூலகத்தில் கணக்கை துவங்கமுடியவில்லை அறியாமையாலும் பயத்தினாலும்.
நான் கல்லூரியில் புத்தகத்தின் மேன்மையை இன்னும் அறிந்துக்கொண்டேன் அதற்கு பெரிதும் உதவியது.....என் அன்புத் தோழி பவ்ய பரமேஸ்வரி, புத்தகப்புழு அவள்.நூலகத்தில் இருந்து அவள் எடுத்து வந்ததை படித்துவிட்டு எனக்களிப்பாள்.அப்படி படித்த புத்தகங்கள் பிடல் காஸ்ட்ரோ,பெரியார்,காமராஜர் என தலைவர்களை தெரியவைத்தது.மனஇயல்,அரசியல் என அறிவை பெறுகவைத்தது...
சில புத்தகங்களை வாங்கினேன்,படித்தேன்,நூலகத்தில் பவ்யாவின் உதவியால் கணக்கை துவங்கினேன்.படிக்க ஆரம்பித்துள்ளேன்.